News November 25, 2025

மயிலாடுதுறை அருகே 1008 சங்காபிஷேகம்

image

திருவெண்காடு கிராமத்தில் புதன் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News

News March 9, 2026

மயிலாடுதுறை: 597 மனுக்களை அளித்த பொதுமக்கள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தனித்துணை ஆட்சியர் கீதா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், மொத்தம் 597 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை தனித்துணை ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலகரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

News March 9, 2026

மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, மயிலாடுதுறை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க!

News March 9, 2026

மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!