News April 25, 2024

மண்ணெண்ணெய் தருவதை மத்திய அரசு குறைத்துவிட்டது

image

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்து வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், 2021இல் 8500 கிலோ லிட்டர், 2022இல் 4500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு, தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

Similar News

News February 6, 2026

இந்தியா, US வர்த்தக டீல்.. இறுதி முடிவு

image

இந்தியா, US வர்த்தகத்தின் சட்டப்பூர்வ ஒப்பந்தமானது மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுபற்றிய இருநாடுகளின் கூட்டறிக்கை அடுத்த 4-5 நாள்களில் வெளியானவுடன் அதிபர் டிரம்ப் அரசாணை பிறப்பிப்பார் என்ற அவர், தற்போது உள்ள 50% வரி 18% ஆக குறைக்கப்படும் எனக் கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப ₹45 லட்சம் கோடிக்கு US பொருள்கள் வாங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

News February 6, 2026

ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு.. PM மோடி காட்டம்

image

இந்திய இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் தட்டிப் பறிப்பதாக PM மோடி கூறியுள்ளார். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டிய PM மோடி, அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்துவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே பாஜக அரசுக்கு நேரம் போய்விடுவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் PM மோடி குறிப்பிட்டார்.

News February 6, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

error: Content is protected !!