News April 25, 2024
இந்திரா சொத்துக்காக வரியை ரத்து செய்தார் ராஜீவ் காந்தி

இந்திராவின் சொத்து அரசுக்கு செல்வதை தடுக்கவே பரம்பரை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக மோடி சாடியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் முன்பு அமலில் இருந்த பரம்பரை வரியின்படி, யாரேனும் உயிரிழந்தால் அவர் சொத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்து கொள்ளும் என்று தெரிவித்தார். இந்திரா மறைவுக்குப் பிறகு அவர் சொத்து அரசிடம் செல்வதைத் தடுக்கவே, அந்த வரியை ராஜீவ் ரத்து செய்தார் என்று அவர் கூறினார்.
Similar News
News November 13, 2025
தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.
News November 13, 2025
81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள்: ECI

கடந்த நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.13) மதியம் 3 மணி வரை 81.37% வாக்காளர்களுக்கு SIR கணக்கீட்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
News November 13, 2025
நாட்டாமை சாதிப்படம் கிடையாது: சரத்குமார்

‘நாட்டாமை’ சாதிப்படம் கிடையாது என்று சரத்குமார் கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கக்கூடிய ஒருவரின் திறன் உள்ளிட்ட பண்புகளை பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படமாக அது இருந்தது என்றும், ‘தேவர் மகன்’ படமும் சாதியை திணிக்கும் படமல்ல எனவும் விளக்கமளித்துள்ளார். மாரி செல்வராஜின் படங்கள், ஏற்கெனவே நிகழ்ந்தவற்றை மீண்டும் அழுத்தமாக கூறுவதாக உள்ளதாகவும், தனக்கு சமத்துவமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.


