News November 25, 2025

சென்னை: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் தற்கொலை

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்(19). கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் மகளிர் போலீசாரால், ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளிவந்த அவர், கொரட்டூரில் மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.

Similar News

News March 11, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

சென்னை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 11, 2026

சென்னை: குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்

image

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய தாழ்த்தள மின்சார ‘குளிர்சாதன ப்ரீமியம் பேருந்து’ சேவையை இன்று(மார்ச் 11) தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சிவசங்கர்., தண்டையார்பேட்டை பேருந்து பணிமனையில் புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

error: Content is protected !!