News November 25, 2025
மயிலாடுதுறை: பூட்டை உடைத்து திருட்டு!

மாப்படுகையைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி காரைக்குடி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன், 2 கிராம் நகைகள் மற்றும் வெள்ளி காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
மயிலாடுதுறை: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
மயிலாடுதுறை: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

குத்தாலம் அ.தி.மு.க தெற்கு ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சந்திரபோஸ்வர்மா தலைமை தாங்கினார். அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன் ராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம், உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.


