News November 25, 2025
ராமநாதபுரம் அருகே கடல் அலை சுழலில் சிக்கியவர் மாயம்

நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. மீனவரான இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18, ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர். அப்போது சிக்கியதால் தொண்டீஸ்வரனை அலை சுழல் இழுத்துச் சென்றது. போலீசார் உள்ளிட்ட பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News March 14, 2026
இராம்நாடு: OPS அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

ராமநாதபுரம் தனியார் மஹாலில் நேற்று மார்ச்.13 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மீட்பு கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 14, 2026
பரமக்குடி: பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.!

பரமக்குடி அருகே உள்ள கலையூர் கருங்குளம் கிராமத்தில் ராமாயி என்ற மூதாட்டி (82) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குக்கு பிறகு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல்தானம் செய்த ராமாயி குடும்பத்தாரிடம் மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.
News March 13, 2026
ராம்நாடு : குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.


