News November 25, 2025
புதுகை: இறந்தும் வாழும் இளம்பெண்!

புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரி (23) என்ற இளம்பெண் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். இதன் மூலம் 6 பேருக்கு முருகேஸ்வரி மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உடலுக்கு இறுதி சடங்கின் போது அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News March 7, 2026
புதுக்கோட்டை: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <
News March 7, 2026
சாதனை மலரை வெளியிட்ட புதுகை கலெக்டர்!

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(மார்.6) “கனவு மெய்ப்பட வேண்டும்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், கலெக்டர் அருணா தலைமையில், தமிழக அரசின் சார்பில், கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு மலரை வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்ட அரசு அலுவகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
புதுகை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


