News November 25, 2025

திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

image

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

Similar News

News March 5, 2026

திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவி நிரப்பப்படவுள்ளது. தகுதியுடைய நபர்கள் https://tiruchirappalli.dcourts.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் 16 ஆம் தேதிக்குள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

திருச்சி: ஆதார் முகாம் குறித்த அறிவிப்பு

image

திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர் dotiruchirappalli.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

திருச்சி: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல், சோளம், எள் பயிருக்கு பிரீமியம் தொகை செலுத்த வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களில் காப்பீட்டுத் தொகையை செலுத்தி பயனடையுமாறு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!