News November 25, 2025

செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

செங்கல்பட்டு: தீக்குளித்த சிறுவன் உயிரிழப்பு!

image

கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் நித்திஷ் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை இரவு கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பு மைதானத்தில், நித்திஷ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நித்திஷ் நேற்று உயிரிழந்தார்.

News December 3, 2025

செங்கல்பட்டிற்கு விடுமுறை அறிவிப்பு!

image

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.3) செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை இன்று (டிச.3) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

News December 3, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (டிச.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!