News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Similar News

News November 26, 2025

உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு முக்கிய உத்தரவு

image

நகை திருட்டு தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத பட்சத்தில், பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போலீசார் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30% தொகையை இழப்பீடாக வழங்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க திறமைமிக்க அதிகாரிகளை நியமிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News November 26, 2025

மதுரை: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 26, 2025

மதுரை: கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

image

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பாலமுருகன் 40.பெற்றோர் இறந்த நிலையில் பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். நவ.17 காலை ஊர் மயானத்தில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் விசாரித்ததில் அப்பகுதி கட்டட தொழிலாளர்கள் மாயமானது தெரிந்தது. தொடர் விசாரணையில் யூனியன் ஆபீஸ் காலனி கேசவன் 23, பொட்டுலுபட்டி சேதுபதி பாஸ்கர் 23 மற்றும் 17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!