News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Similar News

News March 12, 2026

மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News March 12, 2026

மதுரை: பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு.!

image

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பெருமாள். இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2026

மதுரை: சித்திரைத் திருவிழா அட்டவணை வெளியீடு

image

மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையை திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 18 ம் தேதி வாஸ்து சாந்தி தொடங்கப்பட்டு, 30 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நடைபெறும் வரை அனைத்து நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ம் தேதி கள்ளழகர் வைகை எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!