News November 25, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News March 14, 2026

தருமபுரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 14, 2026

‘அதிமுக-வை பாஜக கபளீகரம் செய்யும்’- து.முதல்வர் பேச்சு!

image

தருமபுரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கவே மாநிலத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. பீகாரைப் போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க-வை பா.ஜ.க கபளீகரம் செய்யத் துடிக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு நிதிஷ்குமார் நிலைதான் ஏற்படும்” என எச்சரித்தார்.

News March 14, 2026

தருமபுரி: இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு தற்கொலை

image

தருமபுரி மாவட்டம், மல்லாபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி (23), ஒருதலைக் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். தான் தூக்கிடும் காட்சியைச் செல்போனில் வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!