News November 25, 2025
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி குடிக்கவும். இப்படி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மூலம், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் நீங்கும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை அருகே பெண் கைது

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மணல்மேடு காவல் சரகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு அருகே கொற்கை சாலை தெரு பகுதியில் விஜயகுமார் என்பவரது மனைவி சங்கீதா (39) விற்பனைக்காக 200 பாண்டி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து, அவற்றை பறிமுதல் செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
News November 25, 2025
வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.
News November 25, 2025
தாக்கத்தை ஏற்படுத்துமா OPS, செங்கோட்டையன் அரசியல்

அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை அன்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சபதம் ஏற்றனர். ஆனால், சபதம் எடுத்து 25 நாள்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று OPS கூறுகிறார். மறுபுறம் செங்கோட்டையனோ தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால், 2026-ல் தமிழக அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.


