News November 25, 2025
ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டை: கடன் தொல்லையா.. இந்த கோயிலுக்கு போங்க!

ராணிப்பேட்டையில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
News November 27, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

நெமிலி அடுத்த திருமால்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஸ்ரீநாத் (18). ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இவர், நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெமிலி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
மீண்டும் மஞ்சப்பை விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுற்றுச்சூழலை பாதுகாக்க வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை 15-01-2026 தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


