News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
Similar News
News November 27, 2025
முதல்வர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என கூறியுள்ளார்.
News November 27, 2025
ECR-OMR இரும்பு மேம்பாலத்திற்கு அனுமதி

ECR மற்றும் OMR-ஐ இணைக்கும் வகையில் ரூ.204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பாலம் நீலாங்கரையில் அமைக்கப்படும் என்றும், இது பல்லாவரம் – துரைப்பாக்கம் 200 அடி சாலையை நீட்டிப்பதன் மூலம் OMR-லிருந்து ECR-க்கு நேரடி இணைப்பை வழங்கும். இந்த பாலம், பயண நேரத்தை குறைத்து, விமான நிலையத்துக்கும் நேரடி இணைப்பை தருகிறது.
News November 27, 2025
சென்னைக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றார். மேலும் வரும் நவ.30 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு வரும் நவ.29 அன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


