News November 24, 2025
விழுப்புரம்:குறைகேட்பு கூட்டத்தில் குவிந்த 443 மனுக்கள்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுப்பது வழக்கம் அந்த வகையில் இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் மனுகொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். குறைகேட்பு கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகள் 443 மனுக்கள் குவிந்தது. ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
Similar News
News November 25, 2025
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் (76) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் நகராட்சி திருக்கோவிலூர் வடக்கு பகுதி தெற்கு தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News November 25, 2025
விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க. 1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 25, 2025
விழுப்புரம்: மகனே தாய்க்கு எமனாகிய கொடூரம்!

விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நேற்று (நவ.25) முன் தினம் இவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டி கேட்ட தாய் விஜயலட்சுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாய் முண்டியம்பாக்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


