News November 24, 2025
திருச்சி: மழையால் இடிந்து விழுந்த வீடு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு, நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்தவித உயிர்சேதம் ஏற்படாத நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டு வீடிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
திருச்சி: ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், தனது கைப்பையில் மறைத்து கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்பிலான மெத்த பைட்டமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 24, 2025
திருச்சிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று(நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன
News November 24, 2025
காலி பாட்டிலுக்கு ரூ.10: திருச்சியில் புதிய திட்டம் அமல்

திருச்சி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் வரும் நவ.25-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்கு டாஸ்மாக் மது பாட்டில்ககளை வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, காலி மதுபாட்டில்களை மீண்டும் அதே மதுபானக் கடையில் ஒப்படைத்தால், வாடிக்கையாளருக்கு ரூ.10 மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


