News April 25, 2024
IPL: இன்று 300 ரன்கள் குவிக்குமா ஹைதராபாத்?

பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி 300 ரன்கள் குவிக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஹைதராபாத் அணி, 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில், 287/3 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இன்றைய போட்டியில் 300-ஐ கடக்குமா?
Similar News
News August 24, 2025
இதுதான் பங்குச்சந்தை யுக்தியா? என்ன நடந்தது?

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட ஒரே ஆன்லைன் கேமிங் நிறுவனம் Nazara Technologies. இந்நிறுவனத்தின் ₹334 கோடி மதிப்பிலான பங்குகளை கடந்த ஜூனில், பிரபல முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுவாலா விற்றுள்ளார். ஆன்லைன் கேமிங் மசோதா தாக்கலாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு அவர் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே கடந்த 5 நாள்களாக இந்நிறுவனத்தின் பங்குகள் 15.85% அளவு குறைந்துள்ளன.
News August 24, 2025
சென்னையில் நடிகை கைது

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை இறந்த நிலையில், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஆதரவற்று இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நாகம்மா இந்த கொடுமையை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீஸ் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News August 24, 2025
விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா விஜய்? அமைச்சர்

தவெக மாநாட்டில் ‘ஸ்டாலின் Uncle’ என முதல்வரை விஜய் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் இவ்வாறு விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களே மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?