News November 24, 2025

மதுரை: வியாபாரிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு

image

மதுரை மாவட்டம் தபால்தந்தி நகர் பாமா நகர் பகுதியில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி அந்த காய்கறி சந்தைக்கு அனுமதி மறுத்தது. இதனால் நேற்று வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் சமரசத்தை வியாபாரிகள் ஏற்காத நிலையில் போலீசார் கைது செய்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Similar News

News November 27, 2025

மதுரை வந்த ஈபிஎஸ்ஐ வரவேற்ற மாஜி அமைச்சர்கள்

image

மதுரை பாண்டி கோவில் அருகே நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக,பெருங்குடி அருகே உள்ள மதுரை விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து வருகை தந்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்ஐ,முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பிறகும் மீண்டும் சென்னை புறப்பட்டார்.

News November 27, 2025

மதுரை: புதிய ரயில் நிலையத்தில் இதெல்லாம் வருகிறதா?

image

ரூ. 347.47 கோடியில் மதுரை கிழக்கு,மேற்கு பகுதி ரயில் முனைய கட்டடங்கள், பார்சல் போக்குவரத்திற்கான புதிய தனி நடைமேம்பாலம், மேற்கூரையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை, ரயில் நிலைய கிழக்கு நுழைவாயிலின் ஒரு புதிய பல்லடுக்கு 4 சக்கர வாகன காப்பகம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.

News November 27, 2025

மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!

image

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!