News November 24, 2025
திருவாரூர்: வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்த தனியார் பள்ளி ஓட்டுநர் பாலசக்தி (30) என்பவர், லாரி ஓட்டுனரான கீழக்காடு எம்கே நகரை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை, ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து பாலசக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 27, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
திருவாரூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
News November 27, 2025
திருவாரூர்: வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முத்துப்பேட்டையை சேர்ந்த 18 வயது நிரம்பிய வாய் பேச முடியாத மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 23ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தந்தை யார் என்று தெரியாத நிலையில் தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அகல்யா முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகுணா மர்ம நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.


