News April 25, 2024
ED அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜர்

சட்டவிரோத மணல்குவாரி வழக்கு விசாரணைக்காக சென்னையில் உள்ள ED அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர். மணல் குவாரிகள் மூலம் ₹36 கோடி வருவாய் வந்திருப்பதாக மாநில அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ₹4,730 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக ED குற்றம்சாட்டுகிறது. இதில் அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்று, திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர், அரியலூர் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர்.
Similar News
News September 22, 2025
நண்பர்களுக்கு கடன் கொடுப்பீர்களா?

நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுத்தவர்களில் 73% பேருக்கு, பணம் திரும்ப வருவதில்லை என்கின்றது லெண்டிங் ட்ரீ நிறுவனத்தின் சர்வே. அதுமட்டுமல்ல, இதனால் உறவு பாதிக்கப்படுவதாக 25% பேரும், ஏன் கொடுத்தோம் என வருந்துவதாக 43% பேரும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும், எந்த பிணையமோ, ஒப்பந்தமோ, நிபந்தனையோ இல்லாமல் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. பின் இதுவே பிரச்னைக்கு காரணமாகிறது. உங்க அனுபவம் எப்படி?
News September 22, 2025
அமெரிக்காவின் H-1B-க்கு போட்டியாக சீனாவின் ‘K விசா’

உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களை தங்கள் நாட்டில் பணியாற்ற ஈர்க்கும் வகையில் சீனா K விசாவை அறிமுகம் செய்கிறது. அக்.1 முதல் அமலுக்கு வரும் இந்த விசா அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் & கணிதம் (STEM) துறைகளை சார்ந்தவர்களுக்கு பொருந்தும். அண்மையில் H-1B விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்கா ₹88 லட்சமாக உயர்த்திய நிலையில், சீனாவின் அறிவிப்பு இதற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.
News September 22, 2025
அரசியல் படமாக வரும் சார்பட்டா – 2

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைக்கு இப்படம் வரவில்லை என்ற பலர் வேதனைப்பட்ட நிலையில், சார்பட்டா – 2 குறித்த அப்டேட்டை ரஞ்சித் கொடுத்துள்ளார். கதை ரெடியாகிவிட்டதாகவும், சில மாறுதல்களை மேற்கொண்டு விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான அரசியல் காலகட்டத்தை இப்படம் பேசுகிறதாம்.