News April 25, 2024

ED அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜர்

image

சட்டவிரோத மணல்குவாரி வழக்கு விசாரணைக்காக சென்னையில் உள்ள ED அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர். மணல் குவாரிகள் மூலம் ₹36 கோடி வருவாய் வந்திருப்பதாக மாநில அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ₹4,730 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக ED குற்றம்சாட்டுகிறது. இதில் அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்று, திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர், அரியலூர் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர்.

Similar News

News April 8, 2026

அண்ணாமலைக்கு முக்கிய பதவி.. புதிய தகவல் கசிந்தது

image

அண்ணாமலையின் <<19594854>>திடீர் டெல்லி பயணம்<<>> தொடர்பாக புதிய தகவல் கசிந்துள்ளது. மோடி, அமித்ஷா அழைப்பின்பேரில் அவர் டெல்லி சென்றிருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. L.முருகன் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவரது மத்திய இணையமைச்சர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

News April 8, 2026

IPL: இன்றும் மழைக்கு வாய்ப்பு

image

IPL-ல், இன்று DC, GT அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. ஏற்கெனவே KKR Vs PBKS, RR Vs MI அணிகள் இடையிலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4-6 மணி வரை 15% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

News April 8, 2026

தவெகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் பரபரப்பு

image

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பியதாக ஆதவ் ஆர்ஜுனா முக்கிய தகவலை கூறியுள்ளார். ஆனால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று இந்த கூட்டணி அமையவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாவிட்டாலும், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு கிடைத்துவிடும் என்றும் ஆதவ் பேசியுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?

error: Content is protected !!