News April 25, 2024

பிடிபட்டவர்களைத் தெரியும்; பணம் என்னுடையதல்ல

image

வரும் மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ₹200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதலான நிலையில் ₹4 கோடி குறித்து மட்டும் விசாரிக்கின்றனர். அந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிடிபட்ட 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். அவர்களை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.

Similar News

News March 10, 2026

போர் காலத்தில் இவற்றை செய்தால் தப்பிக்கலாம்

image

இஸ்ரேல், USA தொடங்கிய போரால் தற்போது மேற்காசிய நாடுகள் பற்றி எரிகின்றன. இந்நிலையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தால் எப்படி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில டிப்ஸ் அளித்துள்ளனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இது வெறும் தகவலுக்காக மட்டுமே. போர் வரப்போகிறதா என பதற்றமடைய வேண்டாம் மக்களே. SHARE.

News March 10, 2026

கச்சா எண்ணெய் விலை சரிந்தது.. இன்ப அதிர்ச்சி!

image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $10(₹918) குறைந்துள்ளது. இதனால், 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் விலை தற்போது $85- $90 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பேசிய நிலையில், இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு நீங்குவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் சற்று தணிந்துள்ளது.

News March 10, 2026

பாஜகவின் வக்கிரமான அரசியல்: நாஞ்சில் சம்பத்

image

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அதை விஜய் எதிர்கொள்வார் எனக் கூறிய அவர், தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக இருப்பதாகவும், அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!