News November 23, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 24, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!

image

கள்ளக்குறிச்சியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கன மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2025) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு விடுமுறை!

image

புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது, இந்த மழையின் காரணமாக ஏற்கெனவே தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட மாவட்டங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!