News November 23, 2025

மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

image

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், நாளைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், அந்தமான் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

நம்பித்தானே கொடுத்தேன்: கோபமான தோனி

image

2019 IPL-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், டெத் ஓவர் CSK வீரர் தீபக் சாஹரிடம் கொடுக்கப்பட்டது. முதல் 2 பந்துகள் no ball ஆனது. இதனால், ‘நீ முட்டாள் இல்லை, நான் தான் முட்டாள், உன்னை நம்பித்தானே பந்தை கொடுத்தேன்’ என்று தோனி திட்டியதாக சாஹர் நினைவுகூர்ந்துள்ளார். இதனையடுத்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்த சாஹர், 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் CSK-வும் வென்றது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா?

image

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
*மன அழுத்தம் குறையும்.
*ரத்த ஓட்டம் சீராகும்.
*தலைவலி குறையும்.
*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.
*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.
உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 24, 2025

SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

image

SIR-க்கு ஆதரவாக பாஜக, அதிமுக பேசிவரும் நிலையில், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக கூறி, தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, SIR பணிகளால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக விஜய் கூறியிருந்தார்.

error: Content is protected !!