News November 23, 2025
நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News February 3, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.2] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் அன்டோ ஆரோக்யராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News February 3, 2026
நெல்லையப்பர் கோவிலில் நாளை பொது விருந்துக்கு அழைப்பு

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பர் திருக்கோயில் நாளை பிப்ரவரி மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெறுகிறது. பகல் 2:30 மணிக்கு தொடங்கும் இந்த பொது விரைவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


