News November 23, 2025

விருதுநகர்: ஆசிரியர் அடித்ததில்.. மாணவருக்கு ஆபரேஷன்

image

விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10th படிக்கும் மாணவரை, வகுப்பறையில் நவ., 17ல் சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பிரம்பால் அடித்தார். அப்போது, அருகே அமர்ந்திருந்த மாணவரின் இடது கண்ணில் பிரம்படி பலமாக விழுந்ததால், கருவிழியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 10, 2026

விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை

image

விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பண்ணன் வயது 80. இவரின் மனைவி இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து வந்த ஆமத்தூர் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு.

News February 10, 2026

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE

News February 10, 2026

சிவகாசி: பஸ் மோதி ஒருவர் பலி!

image

சிவகாசி, திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சேர்ந்த நடராஜன்(45). சம்பவத்தன்று அவர் டூவீலரில் எரிச்சநத்தம் – சிவகாசி மெயின் ரோட்டில் சென்றபோது, காளையார்குறிச்சி அருகே வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பள்ளி பஸ் டிரைவர் காட்டுராஜா(53) மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!