News November 23, 2025
காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News February 11, 2026
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறாா். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் பேரவையில் அவா் ஒப்புதல் கோருகிறாா்.
News February 11, 2026
புதுச்சேரி: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

புதுச்சேரி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <
News February 11, 2026
புதுச்சேரி: காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த, 148 காவலர் பணியிடங்களுக்கான (ஆண்கள் – 100, பெண்கள் – 48) எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்விற்கான முடிவுகள் recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமான சான்றிதழ் சரிபார்ப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.


