News November 23, 2025
அரியலூர்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 26, 2025
அரியலூர்: வழக்கில் இருந்து MLA விடுதலை

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இன்று அந்த வழக்கில் இருந்து அரியலூர் MLA சின்னப்பா உட்பட முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்களை மாவட்ட முதன்மை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
News November 26, 2025
JUST IN அரியலூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
அரியலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் – 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28.11.2025ம் தேதி காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


