News November 23, 2025

குமரி: 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா இவருக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை. களியக்காவிளை பகுதியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News November 27, 2025

குமரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 27, 2025

குமரி: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News November 27, 2025

குமரி: 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

களியக்காவிளை அருகே காரக்கோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

error: Content is protected !!