News November 23, 2025
கடலூர்: பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

கடலூர் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் சாந்தி(47). இவர் தனது வீட்டின் அருகில் தவறிகீழே விழுந்ததில் வயிற்றில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் 332 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 128 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரையில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று தெரிவித்துள்ளார். இதில், 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், 15 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (23/11/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (23/11/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


