News November 23, 2025

குழந்தைத்தனமாக செயல்படும் மாதம்பட்டி: ஜாய் கிரிசில்டா

image

தன்னை வீழ்த்துவதற்காக மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கூட்டணியை உருவாக்கி வேலை செய்வதாக ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னுடைய செல்போன் எண்ணை பலரிடம் கொடுத்து மெசெஜ் அனுப்ப சொல்லுவதாகவும், இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் மாதம்பட்டி ஈடுபடுவார் என தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உங்களுடைய பணம் பத்தும் செய்யும், ஆனால் உண்மையை ஒருபோதும் புதைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

ரயில்வே வேலை, டிகிரி போதும், 8,858 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it.

News November 24, 2025

BREAKING: 22 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

image

அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி வரை) 22 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நெல்லையில் கனமழையும், கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

காங்., படுதோல்விக்கு இதுவே காரணம்: அண்ணாமலை

image

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இதே மனநிலைதான் பிஹாரில் இருந்ததாகவும், அதனால்தான் NDA கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிஹாரில் காங்கிரஸுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழகத்திலும் நடக்கும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.

error: Content is protected !!