News November 23, 2025

குழந்தைத்தனமாக செயல்படும் மாதம்பட்டி: ஜாய் கிரிசில்டா

image

தன்னை வீழ்த்துவதற்காக மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கூட்டணியை உருவாக்கி வேலை செய்வதாக ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னுடைய செல்போன் எண்ணை பலரிடம் கொடுத்து மெசெஜ் அனுப்ப சொல்லுவதாகவும், இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் மாதம்பட்டி ஈடுபடுவார் என தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உங்களுடைய பணம் பத்தும் செய்யும், ஆனால் உண்மையை ஒருபோதும் புதைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

UAN-ல் இருந்து தவறான ஐடியை நீக்க இதை செய்யுங்கள்

image

*Unified Member போர்ட்டலுக்குள் சென்று, உங்கள் UAN விவரங்களை உள்ளிடுங்கள்.
*Views ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
*அதில் service history-ஐ ஓபன் செய்து, அதில் தவறான member ID-ஐ கிளிக் செய்யுங்கள்.
*பின்னர் அதனை delink கொடுங்கள்.
*அதற்கான காரணத்தை உள்ளிட்டால், மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு நீக்கிவிடலாம்.
*உங்கள் நிறுவனம் தவறான ECR-ஐ பதிவுசெய்திருந்தால், error என மெசேஜ் வரும்.

News November 24, 2025

MGR-க்கு ஜெயலலிதா துரோகம் செய்தார்: அமைச்சர் நாசர்

image

வாழையடி வாழையாக வரும் துரோகத்தின் உச்சக்கட்டமே அதிமுக என்று அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார். கருணாநிதிக்கு துரோகம் செய்தவர் MGR என்ற அவர், MGR-க்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா என கூறினார். ஜெ.,க்கு சசிகலாவும், சசிகலாவுக்கு EPS-ம் துரோகம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார். தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் அதிமுகவினர், அவர்களது கட்சியை வளர்த்தெடுத்தவர்களை விட்டுவிடுகின்றனர் என்றார்.

News November 24, 2025

BREAKING: 5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கையால் 5-வது மாவட்டமாக திருவாரூருக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!