News November 23, 2025
குழந்தைத்தனமாக செயல்படும் மாதம்பட்டி: ஜாய் கிரிசில்டா

தன்னை வீழ்த்துவதற்காக மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கூட்டணியை உருவாக்கி வேலை செய்வதாக ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னுடைய செல்போன் எண்ணை பலரிடம் கொடுத்து மெசெஜ் அனுப்ப சொல்லுவதாகவும், இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் மாதம்பட்டி ஈடுபடுவார் என தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உங்களுடைய பணம் பத்தும் செய்யும், ஆனால் உண்மையை ஒருபோதும் புதைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
இஸ்லாமிய வெறுப்பால் பாஜக வெற்றி: ஷாநவாஸ்

இஸ்லாமிய பிரதிநிதித்துவத்தில் பாஜக முன்வைத்த சோஷியல் இன்ஜினியரிங் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் ஓட்டுகளே எங்களுக்கு தேவையில்லை என்ற இடத்திற்கு பாஜக வந்துவிட்டது. இந்த மண்ணில் இருக்கும் மிகப்பெரிய மக்களை வேண்டும் என்று ஒரு கட்சி சொல்கிறது. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இஸ்லாமிய வெறுப்பு ஊடுருவியுள்ளது எனவும் விமர்சித்தார்.
News February 11, 2026
தமிழகம் முழுவதும் SIR பணிகள் முடிவடைந்தன!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR பணிகளின் போது சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிச.19 முதல் இன்று (பிப்.10) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி SIR பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
News February 11, 2026
செங்கோட்டையனின் பரிதாப நிலை: திண்டுக்கல் சீனிவாசன்

சமீபத்தில் EPS-ஐ சீண்டிய செங்கோட்டையனை திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் முதன்மையானவராக இருந்த செங்கோட்டையனின் தற்போதைய நிலையை பார்த்தால் பரிதாபமாகவும் கஷ்டமாகவும் இருப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் முதலிடத்தில் இருந்த மாபெரும் மனிதரை (KAS) தவெகவில் 5-ம் இடத்தில் உட்கார வைத்துள்ளனர்; இதையெல்லாம் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது என்றார்.


