News November 23, 2025
ஈரோடு கவிஞர் தமிழன்பன் காலமானார்

சென்னிமலையில் பிறந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் வித்தகராகத் திகழ்ந்தவர்.இவரின் இறுதிச் சடங்கு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என தகவல்.
Similar News
News January 30, 2026
சென்னிமலை அருகே கொடூரக் கொலை சம்பவம்!

சென்னிமலை யூனியன் ஈங்கூர் செங்குளம் அம்மன் நகரைச் சேர்ந்த மதன்குமார்(26), மதுபோதையில் தம்பி சக்திவேலுடன்(25) தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சக்திவேல், அண்ணனை அடித்து கீழே தள்ளி, ஹாலோ பிளாக் கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்தார். விபத்து போல நாடகமாடிய சக்திவேலை, சென்னிமலை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 30, 2026
அந்தியூர் அருகே சாக்கடையில் விழுந்து தொழிலாளி பலி.

அந்தியூர் கொல்லபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவர் அந்தியூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்தியூர் கொல்லபாளையம் சாலையில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வேகத்தடையில் ஏறி நிலை தடுமாறி அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


