News November 22, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (22.11.2025) மற்றும் நாளை (23.11.2025) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளை தொடர்புகொண்டு விரைந்து விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News February 12, 2026
நீலகிரி: 80 பேர் அதிரடி கைது

நீலகிரி மாவட்டத்தில், பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் சேரம்பாடி பஜாரில் கனரா வங்கிக்கு முன் CITU தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் சுமார் 80 பேர் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரும் 11.45 மணிக்கு கைது செய்யப்பட்டு, சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள St. Sebastian Church Hall ல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
News February 12, 2026
நீலகிரி : ₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் வரை பெறலாம்!

தினமும் ரூ.222 சேமிப்பை அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் வரை கிடைக்கும் . அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டித்தால், 10 ஆண்டுகளில் 11 லட்சம் வரை பெற முடியும். அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE IT
News February 12, 2026
அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. தற்போது சமவெளிப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு (ம) தண்ணீர் தேடி மலைப்பகுதிக்கு யானைகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள சாலையில் காட்டு யானை ஒன்று உலா வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.


