News November 22, 2025
பிரபலம் காலமானார்.. CM ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

<<18358061>>கவிஞர் ஈரோடு தமிழன்பன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்றும் தனது கலைப்பணிக்காக எண்ணற்ற விருதுகளை குவித்தவர் எனவும் தமிழன்பனுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இறுதிக்காலம் வரை தமிழுக்கு தொண்டாற்றியவர் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
அனைத்து மகளிருக்கும்.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பெண் கல்வியை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதேபோல், பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ‘SheMart’ என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுய உதவி குழுக்கள் பயன்படும் வகையில், அவர்களது உற்பத்தி பொருள்களை விற்கலாம்.
News February 1, 2026
தேர்தலும்.. FM நிர்மலா சீதாராமனின் புடவையும்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வரும் FM நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துரைக்க காஞ்சிபுரம் பட்டு புடவையை உடுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அவர், பிஹாரின் மதுபானி புடவையை உடுத்தி இருந்தார். அவரின் புடவைகளுக்கும், தேர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. 2025-ல் பிஹார் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 1, 2026
BUDGET 2026: மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம்

மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறையில், ‘மகாத்மா காந்தி கிராம சுராஜ்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற கைவினை கலைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் FM நிர்மலா தெரிவித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை திட்டத்தில்(MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதால் சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது அவரது பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


