News November 22, 2025
பிரபலம் காலமானார்.. CM ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

<<18358061>>கவிஞர் ஈரோடு தமிழன்பன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்றும் தனது கலைப்பணிக்காக எண்ணற்ற விருதுகளை குவித்தவர் எனவும் தமிழன்பனுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இறுதிக்காலம் வரை தமிழுக்கு தொண்டாற்றியவர் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

பிஹாரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாக தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் பருகினால் அவர்களுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என AIIMS டாக்டர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.
News November 23, 2025
விஜய்க்கு அண்ணாவை பற்றி என்ன தெரியும்? TKS

அண்ணாவின் கொள்கைகளை திமுக மறந்துவிட்டதாக விஜய் விமர்சித்திருந்த நிலையில், விஜய்க்கு அண்ணாவை பற்றி ஒன்றும் தெரியாது என TKS இளங்கோவன் பதிலளித்துள்ளார். அண்ணா CM ஆக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆனால் முதல் தேர்தலிலேயே CM ஆக வேண்டும் என கட்சி ஆரம்பித்தவர் விஜய் என்று விமர்சித்துள்ளார். அண்ணாவின் கொள்கைகளை இப்போது வரை திமுக நிறைவேற்றி வருவதாகவும் TKS குறிப்பிட்டார்.
News November 23, 2025
₹105 கோடி.. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’

‘ஜனநாயகன்’ படத்தின் தியேட்டர் உரிமம், 5 விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் ₹105 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் தியேட்டர் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


