News November 22, 2025

மல்லிகை விலை ₹4,000ஆக உயர்ந்தது!

image

சங்கரன்கோவில் மலர் சந்தையில் நேற்று ₹1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று(நவ.22) கிலோவுக்கு ₹4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசன் மற்றும் நாளை முகூர்த்த தினம் என்பதால் தோவாளை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, மதுரை, ஓசூர் உள்ளிட்ட மலர் சந்தைகளிலும், மல்லிகை மட்டுமல்லாமல் கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News February 9, 2026

சசிகலா கட்சியின் பெயர் என்னவாக இருக்கும்?

image

ஜெ., பிறந்த நாளான பிப்.24-ல் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ள சசிகலா, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். கட்சியின் பெயர் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அவர், கட்சியின் பெயரில் அதிமுக கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம். மேலும், ஜெ., அண்ணா திமுக உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News February 9, 2026

கூட்டணியை மறைமுகமாக உறுதி செய்த கிருஷ்ணசாமி

image

தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம் ஒரு கட்சி (DMK, ADMK) என்ற ஆட்சி முறைதான் என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். ‘கூட்டணி ஆட்சி’ என யார் சொல்கிறார்களே அவர்களுடன்தான் கூட்டணி பேசுவோம் என்று தெளிவுபடுத்திய அவர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடும் என்றார். அவரின் இந்த பேச்சு தவெகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்வதுபோல் அமைந்துள்ளது.

News February 9, 2026

அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

image

*அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்
*கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்… கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை
*உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன்மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி
*வெறுப்பது யாராக இருந்தாலும். நேசிப்பது நீங்களாக இருங்க.. *இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்

error: Content is protected !!