News April 25, 2024
IPL: ஆட்டநாயகன் விருது வென்ற ரிஷப் பண்ட்

GT-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், DC கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 5 Four, 8 Six என விளாசி 88*(43) ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், GT வீரர்கள் ஷாருக்கான் மற்றும் திவாட்டியாவின் கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வாங்கும் 2ஆவது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.
Similar News
News November 13, 2025
வாவ்.. என்ன ஒரு கற்பனை.. அசத்திய போட்டோகிராபர்!

சாதாரண போட்டோவையும் தனது கிரியேட்டிவிட்டி மூலம், ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றி வருகிறார் புகைப்பட கலைஞர் Suissas. ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை Guitar-ஆகவும், பாலத்தின் தூணை கத்திரிகோலாகவும் மாற்றி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறார். அவரின் கைவண்ணத்தை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களை மிகவும் கவர்ந்த போட்டோ எது?
News November 13, 2025
சற்றுமுன்: விலை ₹10,000 உயர்ந்தது.. புதிய உச்சம்

வரலாறு காணாத புதிய உச்சமாக வெள்ளி விலை இன்று ஒரு நாளில் மட்டும் ₹10,000 அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ₹173-க்கும், ஒரு கிலோ ₹1.73 லட்சத்திற்கும் விற்பனையானது. ஆனால், இன்று ஒரு கிலோ ₹1.83 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு வாரத்தில் ₹18,000 வரை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 13, 2025
விஜய் சேதுபதியை இயக்க ரெடியாகும் மகிழ் திருமேனி!

‘விடாமுயற்சி’ படம் தோல்வியாக அமைந்தாலும், இயக்குநர் மகிழ் திருமேனி தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். தமிழ், ஹிந்தி என இருமொழி படமாக உருவாகும் இதில், ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும், ஷ்ரத்தா கபூர், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ‘தடம்’, ‘தடையற தாக்க’ போன்ற ஒரு அசத்தல் படத்தை மீண்டும் மகிழ் கொடுப்பாரா?


