News April 25, 2024
5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர், அரியலூர் ஆட்சியர்களுக்கு E.D. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் 5 ஆட்சியர்களுக்கும் E.D. கடந்த நவம்பரில் சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றமும் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து E.D. மீண்டும் சம்மன் அனுப்பியது. அதையேற்று 5 பேரும் இன்று நேரில் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.
Similar News
News November 13, 2025
சற்றுமுன்: விலை ₹10,000 உயர்ந்தது.. புதிய உச்சம்

வரலாறு காணாத புதிய உச்சமாக வெள்ளி விலை இன்று ஒரு நாளில் மட்டும் ₹10,000 அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ₹173-க்கும், ஒரு கிலோ ₹1.73 லட்சத்திற்கும் விற்பனையானது. ஆனால், இன்று ஒரு கிலோ ₹1.83 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு வாரத்தில் ₹18,000 வரை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 13, 2025
விஜய் சேதுபதியை இயக்க ரெடியாகும் மகிழ் திருமேனி!

‘விடாமுயற்சி’ படம் தோல்வியாக அமைந்தாலும், இயக்குநர் மகிழ் திருமேனி தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். தமிழ், ஹிந்தி என இருமொழி படமாக உருவாகும் இதில், ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும், ஷ்ரத்தா கபூர், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ‘தடம்’, ‘தடையற தாக்க’ போன்ற ஒரு அசத்தல் படத்தை மீண்டும் மகிழ் கொடுப்பாரா?
News November 13, 2025
மெட்ரோ ரயில்வே டிராக்கில் சோலார் பேனல்கள்

நாட்டிலேயே முதல்முறையாக, RRTS (அ) மெட்ரோ ரயில்வே டிராக்குகளில் சோலார் பேனல்களை வைத்து மின் உற்பத்தி செய்யும் ‘Solar on track’ எனும் திட்டம், உ.பி.,யின் துஹாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 17,500 kWh எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டு முழுவதும் 16 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்க முடியும். 550 Wp திறன் கொண்ட 28 உயர்திறன் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.


