News November 22, 2025

நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

image

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News November 23, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மொத்த மழையளவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 7.40 மிமீ, நாமக்கல் 11 மிமீ, பரமத்திவேலூர் 16 மிமீ, புதுச்சத்திரம் 5 மிமீ, ராசிபுரம் 10 மிமீ, சேந்தமங்கலம் 4.60 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 4 மிமீ, கொல்லிமலை 9 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News November 23, 2025

நாமக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க!

News November 23, 2025

நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!