News November 22, 2025
வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.
Similar News
News February 19, 2026
வேலூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

வேலூர் மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
வேலூரில் காமுகனுக்கு 5 ஆண்டு சிறை!

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
News February 19, 2026
வேலூரில் அதிகாரிகள் அதிரடி!

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப்.18) வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். 15 நாட்களுக்கு பின்னரே ‘சீல்’ அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


