News November 22, 2025
நெல்லை: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

விகேபுரம் அருகே காக்காநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அங்குள்ள யூனியன் கவுன்சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து விகே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
நெல்லை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

திருநெல்வேலி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News November 22, 2025
நெல்லை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 22, 2025
நெல்லை: 2002ம் SIR-ஐ தெரிந்துகொள்ள QR கோர்டு சேவை

நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் இந்த பணிகளில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள பல்வேறு இணைய சேவைகள் வழங்கப்பட்டாலும் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் புதிய QR கோர்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் பயன் பெறலாம்.


