News November 22, 2025
வேலூர்: சூதாடிய வாலிபர் கையும் களவுமாக கைது!

வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு நேற்று (நவ.21) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் (27) என்ற வாலிபரை போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.
News November 22, 2025
வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.
News November 22, 2025
வேலூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

வேலூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


