News November 22, 2025
மொடக்குறிச்சி அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து

ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதமாக விதமாக அந்த வழியே வந்த சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் தப்பினர் இது குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News November 22, 2025
ஈரோடு: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 22, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

கார் ஓட்டும்போது மொபைலில் மெசேஜ் அனுப்புவது கவனச்சிதறலை ஏற்படுத்தி பெரும் விபத்துகளுக்கு காரணமாகும், என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைலை பயன்படுத்தக் கூடாது; அவசரமாக இருந்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பின்னர் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் ஃபோனை அணுக முடியாத இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 22, 2025
சிவகிரியில் பட்டப்பகலில் கொள்ளையர்கள்!

சிவகிரி அருகே குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபாளையத்தை சேர்ந்த ராவுத்தகுமார் (39), தோட்டத்திற்கு புறப்பட்டபோது சந்தேகமான 2 பேர் வீட்டை நோக்கி நின்று இருந்தனர். திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்து திருட முயன்றனர். ராவுத்தகுமார் சத்தமிட்டதால், மர்ம நபர்கள் அவரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.


