News November 22, 2025

சேலம் அருகே பெண் உடல் நசுங்கி பலி!

image

நாமக்கல்லை சேர்ந்த தம்பதி யாசர் – அபிதா. இருவரும் நேற்று பைக்கில் ராசிபுரத்தில் இருந்து சேலம் வழியாக அரூருக்கு புறப்பட்டனர். மாசிநாயக்கன்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது உரசியவாறு சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்த அபிதா, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 22, 2025

BREAKING: சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக் கொலை!

image

சேலம், கரியகோவில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் நிலத்தகராறு தொடர்பான பிரச்னையில், நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். திமுக கிளை செயலாளராக ராஜேந்திரன் பதவி வகித்துள்ளார். கரியகோவில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். திமுக நிர்வாகி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News November 22, 2025

சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

சேலம் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 22, 2025

தலைவாசல் அருகே டவுசர் கொள்ளையர்கள்!

image

தலைவாசல் அருகே நத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர், கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (25). இவர் வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் தூங்கி உள்ளார். நள்ளிரவில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர், வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!