News November 22, 2025
வேலாயுதம்பாளையத்தில் உருட்டுக்கட்டை திருடர்கள்!

வேலாயுதம்பாளையத்தில் இரவு நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட நபர்கள் டவுசர், ஜட்டி மட்டும் அணிந்து, முகம் மறைத்து, கையில் உருட்டுக்கட்டை மற்றும் கத்தி வைத்துக்கொண்டு வீடுகளில் புகுந்து மிரட்டி, 4 வீடுகளில் நகை-பணம் திருடி சென்றனர். இரவில் யார் எனத் தெரியாமல் கதவு தட்டினால் திறக்க வேண்டாம் என்றும், சந்தேக நபர்கள் காணப்பட்டால் உடனே தகவல் அளிக்க வேண்டுமென்று வேலாயுதம்பாளையம் காவல்துறை தெரிவித்தனர்.
Similar News
News February 8, 2026
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)
News February 8, 2026
தென்னிலை: தலைவலியால் நேர்ந்த சோகம்

தென்னிலை பகுதியைச் சேர்ந்தவர் முருகாயி. இவருக்கு நீண்ட நாளாக தலைவலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மன விரக்தியில் விஷம் உட்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


