News November 22, 2025

அந்தியூரில் பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது!

image

அந்தியூர் கொல்லம்பாளையம் சுரேஷ் என்பவர் மனைவியிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர், குழந்தை பிறக்கும் மாத்திரை என கொடுத்துள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சுரேஷின் மனைவி மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் அவரிடம் இருந்த ரூ.25000 பணத்தை எடுத்து தப்பி விட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர் கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (11.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 11, 2026

ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.

News February 11, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.

2.அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு, உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!