News November 22, 2025
பழனி ரயில் நிலையத்தில் பயங்கரம்!

பழனி ரயில் நிலையத்தில் நவம்பர் 21ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
Similar News
News November 22, 2025
பழனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பழனி சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த முருகேஸ்வரி போட்டியிட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
திண்டுக்கல்: 10-வது போதும்.. SUPER சம்பளத்தில் வேலை!

திண்டுக்கல் மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 – ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


