News November 22, 2025

புதுவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தேனூர் அருகே தச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மாதீஷ்(16). இவர் தச்சம்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 21/11/2025 ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 14, 2026

புதுகை: போதை மாத்திரை பயன்படுத்திய 3 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்திய அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கம் பணம், அவர்கள் பயன்படுத்திய மாத்திரை மற்றும் ஊசியை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

புதுக்கோட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 13, 2026

புதுக்கோட்டை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!