News November 22, 2025
புதுச்சேரி: குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.22) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
புதுவை: ஆன்லைனில் ரூ.2.60 கோடி மோசடி

புதுவையில் தினமும் பல்வேறு வகைகளில் ஆன்லைனில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். மக்கள் குறுகிய காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ஆன்லைனில் வரும் போலி லிங்க் மூலமாக சூதாட்டம், பங்குசந்தை, வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு தங்களது பணத்தை பறிகொடுக்கின்றனர். அவ்வாறு நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேரிடம் ரூ.2.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 22, 2025
காரைக்காலில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தங்களது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் (22.11.25), (23.11.25) ஆகிய தேதிகளில் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் தங்களது BLO-வை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடிகளில் சந்தித்து சேவைகளை பெறலாம் என தேர்தல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வருகிற நவ.24ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் எவரேனும் அக்கடல் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருபந்தால், அவர்களை நாளை 23.11.2025 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


