News November 21, 2025
விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு.. இதுதான் காரணம்

சேலத்தில் <<18340402>>விஜய்யின் பிரசாரத்திற்கு<<>> அனுமதி மறுத்தது குறித்து மாவட்ட போலீஸ் விளக்கமளித்துள்ளது. பிரசார நிகழ்ச்சியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற விவரம் அனுமதி கடிதத்தில் இல்லை என்றும், அடுத்த முறை 4 வாரங்களுக்கு முன்பாகவே அனுமதி கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் கடிதம் வழங்கினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று போலீஸ் கூறியுள்ளது.
Similar News
News November 22, 2025
தேனி: தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.!

வருஷநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயபிரகாஷ் கூலி தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி நாகஜோதி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வி பட்டு, தனியாருக்கு சொந்தமாக தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 22, 2025
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
News November 22, 2025
உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா

ரஷ்ய போர் நிறுத்தத்திற்கு தாங்கள் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உக்ரைனை USA மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணங்க மறுத்தால் ஆயுதங்கள், உளவு தகவல்கள் பகிர்வது நிறுத்தப்படும் என எச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. USA நிபந்தனைகளின் படி, உக்ரைன் சில பகுதிகளை இழக்க நேரிடும்.


